உதவி பொறியாளருக்கு ஊர் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு

மின்சாரத் துறையில் சிறப்பாக பணியாற்றிய உதவி பொறியாளருக்கு தலைமை செயலர் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Update: 2024-03-19 12:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம்,நுகும்பல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மணிமாறன் அவர்களின் கணவர் மணிமாறன் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சாரத் துறையில் உதவி பொறியாளராக சென்னை முகலிவாக்கம் மற்றும் நந்தம்பாக்கம் பிரிவுகளில் பணியாற்றிக் வந்தார்.

கொரோனா காலங்களிலும், புயல் நேரங்களிலும் தனது பகுதி மக்களுக்கு இரவு பகல் என்று பார்க்காமல் சிறப்பாக பணி செய்தமைக்கு அவருடைய சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசால் பாராட்டு சான்றிதழ் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா IAS அவர்கள் வழங்கினார்.

இதனை கொண்டாடும் விதமாக சித்தாமூர் ஒன்றியம்,மேல்மருவத்தூரில் உதவி பொறியாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்..தம் சொந்த ஊரில் பணி மாறுதல் வந்த சந்தோசத்தை கொண்டாடும் விதத்தில் அவருக்கு குடும்பத்தினர்கள் நண்பர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மிக விமர்சையாக வரவேற்பு கொடுத்தனர்.

Tags:    

Similar News