உயர்கல்விக்கான வழிக்காட்டுதல் பயிற்சி!

திருவண்ணாமலையில் இலங்கை தமிழ் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிக்காட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-05-29 15:11 GMT

உயர்கல்வி பயிற்சி

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் இலங்கை தமிழ் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிக்காட்டுதல் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (29.05.2024) தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News