காலாவதியான சுங்கச்சாவடியை அகற்றுவது மாநில அரசின் எண்ணம்: அமைச்சர்

காலாவதியான சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது தான் மாநில அரசின் எண்ணம் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-23 12:06 GMT

அமைச்சர் எ.வ.வேலு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் வேலு , முத்துசாமி , சாமிநாதன் ஆகியோர் அருந்த்தியர் அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினர்.

பொல்லானுக்கு ஜெயராமபுரத்தில் மணிமண்டபம் கூடிய அரங்கம் கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும் , காலாவதியான சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது தான் மாநில அரசின் எண்ணம் அதை தான் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Tags:    

Similar News