தலைவாசல் அருகே திடீர் தீ விபத்து

தலைவாசல் அருகே லத்துவாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் காய்ந்த மரங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2024-03-21 04:56 GMT

பைல் படம் 

கெங்கவல்லி:சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று சேலம் மாவட்டம், தலைவாசலுக்கு அருகே லத்துவாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் காய்ந்த மரங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags:    

Similar News