தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

சேலத்தில் அதிகமான மாத்திரைகளை தின்று தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2024-05-12 09:24 GMT

சேலத்தில் அதிகமான மாத்திரைகளை தின்று தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சீ நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 44). கூலித்தொழிலாளி. தந்தை, மகன் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று இரவு தனது மனைவி ஹேமா, மகன் சக்திவேல் ஆகியோருடன் அதிகமான மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News