சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-28 15:10 GMT
கோப்பு படம்
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராமையன் காடு சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் நின்ற நபரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்யா (வயது 29) என்பதும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.