சிவகங்கை மறை மாவட்ட 3வது புதிய ஆயர் இன்று பதவியேற்பு
இந்திய தூதர் வருகை;
Update: 2023-11-26 04:03 GMT
ஆயர் லூர்து ஆனந்தம்
சிவகங்கை மறை மாவட்டத்தின் 3-வது புதிய ஆயராக லூர்து ஆனந்தம் சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவம்பர் 26) பொறுப்பேற்கிறார். இவ்விழாவில் திருத்தந்தையின் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜிரில்லி முன்னிலை வகிக்கிறார். மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதிய ஆயரை திருநிலைப்படுத்துகிறார். மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.