மின் விளக்கு எரியாதமேடவாக்கம் மேம்பாலம்

மேம்பாலத்தில் விளக்கு எரியாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Update: 2023-12-17 11:14 GMT
மின் விளக்கு எரியாதமேடவாக்கம் மேம்பாலம்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மேடவாக்கம் மேம்பாலத்தில், இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதாக, புகார் எழுந்துள்ளது. வாகன ஓட்டிகள் கூறியதாவது, பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. தமிழக நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்ட இந்த மேம்பாலங்களையும், அதே நெடுஞ்சாலை துறையினர்தான் பராமரித்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டாக, இந்த இரு மேம்பாலங்களிலும், இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர். தவிர, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சில நேரங்களில், இவர்கள் வளர்க்கும் மாடுகள், மேம்பாலங்களில் படுத்து உறங்குவதும், உலாவுவதும் தொடர்கிறது. இதனாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தவிர, வெளிச்சம் இல்லாத மேம்பாலத்தை, தங்களுக்கான 'ஓபன் பார்' ஆக, மது பிரியர்கள், பயன்படுத்துவதும் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News