வீட்டை காலி செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கள்ளக்குறிச்சியில் வீட்டை காலி செய்ய மறுத்து வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-11-30 06:21 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு, 35; இவரது தந்தை தங்கராசு கடந்த 2015 ம் ஆண்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த சோலையப்பன் என்பவரிடம் காலிமனை மற்றும் மெத்தை வீட்டினை கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்றார். இதையடுத்து அதில் குடியிருந்த சோலையப்பனின் மகன் செல்வகுமார்,51; என்பரிடம் வீட்டை காலி செய்யும்படி அன்பரசு கூறியுள்ளார். ஆனால் வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறி அன்பரசுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News