அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர்
பொன்னமராவதி அருகே அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 14:16 GMT
அங்காடி மையத்தை திறந்து வைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், வேந்தன்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து உரையாற்றினார்.
உடன் பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.