தியாகதுருகம் அருகே கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Update: 2023-11-27 05:09 GMT

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தியாகதுருகம் அடுத்த வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின்  மகன் சுரேஷ்; 46. இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடச் சென்றார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த மாயவேலின்  மகன் தமிழரசன், 23; என்பவருக்கும், மாடூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் சுரேஷ் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த 25 ம் தேதி மாலை 4:00 மணிக்கு தமிழரசன் குடிபோதையில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சுரேஷை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தமிழரசன் தனக்குத்தானே கையை கத்தியால் அறுத்துக் கொண்டார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்தனர்.
Tags:    

Similar News