அச்சரப்பாக்கம்: காதலியை கடத்திய அத்தை மகன்
அச்சரப்பாக்கம் அருகே காரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-25 12:24 GMT
இளம்பெண்
காதலன் கைது
. செங்கல்பட்டு அருகே அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடியில் போலீசார் மடக்கி பிடித்து நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ஜமுனா(22 ) என்ற பெண் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இவர், தனது அத்தை மகன் சபாபதி(27) என்பவரை சிறுவயதில் இருந்து காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜமுனா சபாபதியிடம் ஆறு மாத காலமாக பேசுவதை தவிர்த்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த A. 1சபாபதி (27)தன் நண்பர்களான ஹரிஹரன்(20 ) அஜய் (25 )ராஜேஷ்(39 )ஆகியோருடன் இணைந்து காரில் கடத்திச் செல்லும் போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டு அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.