அட்டகாசம் செய்யும் குரங்கு; மக்கள் அவதி

மறைமலை நகரில் அட்டகாசம் செய்யும் குரங்கால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-23 05:21 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியின் புறநகர் பகுதிகளான என். ஹெச். , -- 1, என். ஹெச். , -- 2, என். ஹெச். , -- 3 உள்ளிட்ட பகுதிகளில், 20, 000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நுாற்றுக்கணக்கான வணிக கட்டடங்கள் உள்ளன. மறைமலை நகரில் உள்ள என். ஹெச். , - 1 பகுதியில், ஒற்றை குரங்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி -மாணவ - மாணவியரை அச்சுறுத்தி வருகிறது. கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கிச் செல்கிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன், 2 பள்ளி குழந்தைகளை, குரங்கு கடித்தது. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்தோர் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கை, வனத்துறை அதிகாரிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News