பீரோவில் இருந்த 2.50 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி திருட்டு

மேல்மருவத்துார் அருகே மேட்டு ஊனமலை கிராமத்தில் ஒரு வீட்டில் பீரோவில் இருந்த 2.50 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டது.

Update: 2024-05-22 14:07 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்துார் அருகே மேட்டு ஊனமலை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜி, 35. நேற்று முன்தினம் இரவு மின் தடை ஏற்பட்டதால், வீட்டின் வெளியே கதவை பூட்டாமல், குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே வந்து, வாசல் பகுதியில் படுத்துள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2.50 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மேல்மருவத்துார் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்தனர். பின், புகாரின் பேரில், வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News