புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்!

ரூ.25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி

Update: 2024-03-05 18:09 GMT
புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சுருட்டல் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.

ரூ.௧௦.40 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் ரூ.௧௫.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடி ஏற்றி இனிப்பு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜு ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கர், தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News