புதுக்கோட்டை மாவட்டத்தில் 1005 ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1005 ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

Update: 2024-01-09 01:19 GMT

பொங்கல் டோக்கன்

புதுக்கோட்டை நடப்பாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி காடுதாரர்களுக்கு பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் பெறுவதற்கான 7ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. புதுகை மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 88 ஆயிரத்து 702 ரேஷன் கார்டுகள் உள்ளன.

இதில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 619 ரேஷன் கார்டுகள் அரிசிகள் மூலமாக அரிசி கார்டுகள். இவர்களுக்கு 1005 ரேஷன் கடைகள் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் 1005 ரேஷன் கடைகளிலும் நேற்று தொடங்கியது.

வரும் 10ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று ரேஷன் கடைக்கு சென்று கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரொக்கத்தை கார்டுதாரர்கள் பெற்று செல்லலாம் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News