வேலூர் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி - போலீசார் விசாரணை.

வேலூர் அருகே விளம்பர பலகை வைக்கும் போது மின்சாரம் தாக்கியதில் தொழிலார்கள் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2023-10-23 04:55 GMT

மின்சாரம் தாக்கி இருவர் பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த குலத்து மேட்டில் சரவணன் என்பவர் ஆயில் மற்றும் பேட்டரி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மூன்றாவது மாடியில் விளம்பரப் பலகை வைப்பதற்காக பெங்களூரில் இருந்து நேற்று மாலை மூன்று பேர் வந்துள்ளனர். அதில் இருவர் விளம்பரப் பலகையின் மீது அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அருகிலுள்ள மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே சலீம் ,கௌஷிக் ஆகிய இருவரும் பலியாகி உள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதியினர்,அரியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விளம்பர பலகை வைக்கும் போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி விளம்பர பலகை வைத்துக் கொண்டிருந்த இருவர் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உடல் கருகி பலியானதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அரியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News