கொலை செய்த இருவர் அதிரடி கைது !

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் கொலையில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை காசி, சகோதரன் தங்கச்செல்வனை பாப்பாகுடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Update: 2024-07-03 09:04 GMT

கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த விக்டர் (22) பாப்பாக்குடி அருகே உள்ள உறவினர் மகளான 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 2) இவர்கள் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது சிறுமியின் உறவினர்கள் வரவும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விக்டரை அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட சிறுமியின் தந்தை காசி, சகோதரன் தங்கச்செல்வனை பாப்பாகுடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News