பள்ளி குழந்தைகளுக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி
By : King 24X7 News (B)
Update: 2023-11-06 11:27 GMT
பள்ளி குழந்தைகளுக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே முக்கூட்டுமலை கிராமத்தில் அமைந்துள்ள இந்து தனியார் துவக்கப்பள்ளியில் வைத்து மாணவ மாணவிகளுக்கு மழை, வெயில் காலங்களில் பாதுகாப்பாக செல்வதற்கு பள்ளி குழந்தைகளுக்கு தமிழ் சேவை சங்கத்தின் நிர்வாக அறக்காவலர் ஞானசரவணவேல் தலைமையில் குடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இந்திரா தலைமை வகித்தார், ஊர் கிராமத்தின் சார்பாக சின்னத்தாய் அவர்கள் முன்னிலை வகித்தார் தமிழ் சேவா சங்கத்தின் நிர்வாகிகள் பாபு, மற்றும் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.