புதுக்கோட்டை அருகே திருமணம் ஆகாத நிலையில் வாலிபர் தற்கொலை

புதுக்கோட்டை அருகே திருமணம் ஆகாத நிலையில் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-14 16:27 GMT

காவல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜஸ்டின் ராஜ் வயது 33 என்பவர் திருமண ஆகாத நிலையில் உடல் நலம் குன்றியதால் மனவேதனையில் விஷம் அருந்தி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கிடைக்கப் பட்ட புகாரின் அடிப்படையில் உடையாளிப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மரணம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News