வி.சி.க., கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில்,நாடாளுமன்றத்தில் எம்பிகளை தகுதி நீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-21 13:42 GMT
நாடாளுமன்றத்தில் எம்பிகளை தகுதி நீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்த மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் கராத்தே இளங்கோ தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி. இல. அகரமுத்து, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பாஸ்கரன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரத பிரதமர் மோடியையும், பிஜேபி தமிழக தலைவர் அண்ணாமலையையும் கண்டித்து, அவர்களுக்கு வீர வணக்கம் என கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும்,இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் முரளி, சுடர்வழவன், உதயா ,சுரேந்தர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News