சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

Update: 2023-12-21 08:12 GMT

சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா பழங்குடியினர் கிராமத்தில் இன்று அதிகாலை சரிதா , துர்கா ,வள்ளியம்மாள், ஆகிய மூன்று பேரை அடுத்தடுத்து சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த பெண்கள் உதகை மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மூன்று பேரை தாக்கிய சிறுத்தையை உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலனும் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News