சமூக மோதலை உருவாக்கும் வாட்ஸ் ஆப் பதிவு - ஒருவர் கைது

மயிலாடுதுறையில் கடந்த மாதம் நடந்த வாலிபர் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவோம் என வாட்ஸ் ஆப்பில் சமூக மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-07 05:19 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறையில் சென்ற மாதம் 20ஆம் தேதி இரவு கலைஞர் காலனியை சேர்ந்த ரவுடி அஜித்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த  வன்னியர்  சங்க பிரமுகர் ரவுடி கண்ணன் கொலைக்கு பழிக்குப்பழியாக தான் இந்த கொலை இது நடந்தது என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த கொலையை ஆதரித்து வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று இக்கொலைக்கு பழிவாங்குவோம் என்று ஒரு சிலர் எதிர்ப்பு காட்டி வாட்ஸ் அப்பில் பதிவிட்டது சமூக மோதலை தூண்டும் செயல் என்று கூறி தற்பொழுது மயிலாடுதுறை அருகே இலையாலூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் என்பவரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News