சிவகாசி அருகே சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடருமா?

சிவகாசி அருகே சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2024-05-20 12:30 GMT
கிடப்பில் போடப்பட்டுள்ள பூங்கா பணி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் வடக்குரத வீதியிலுள்ள செல்லியாரம்மன் ஊரணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இந்த ஊரணி கடும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் கழிவுநீர் தேங்கியிருப்பதாலும் ஊரணி சபெரும் துர்நாற்றம் வீசியது.

இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊருணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க முடிவு செய்தது. இதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.61 லட்சம் நிதியும் ஒதுக்கியது. சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2022ல் செப்டம்பர் மாதம் 28ம் தேதி பூமிபூஜை நடைபெற்ற ஒருசில நாட்கள் மட்டுமே பணிகள் நடைபெற்று பணிகளை கிடப்பில் போடப்பட்டன.

மழைநீர் வற்றிய நிலையில் ஊரணியை சுற்றயுள்ள ஆக்கிரமிப்புகளை எடுத்தால்தான் பணிகளை தொடங்க முடியும் என்று காரணம் கூறப்பட்டது. ஊரணியில் தண்ணீ்ரும் வற்றி ஆக்கிரமிப்புகளும் எடுக்கப்பட்ட பின் ஒருசில நாட்கள் மட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பூமிபூஜை போட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் 20 சதவிகிதம் கூட முடியாத நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. பொதுமகக்ள் நலன் கருதி பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றனர்.

Tags:    

Similar News