பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

புளியம்பட்டி அருகே விஷ பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-06-22 06:31 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள சிங்கத்தாகுறிச்சி கீழத் தெருவைச் சேர்ந்தவர் வேலப்பன் மனைவி மீனா (41). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பு அவரை கடித்ததுள்ளது. இதில் மயக்கம் அடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூக்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News