ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை

இளைஞா் தற்கொலை: போலீசார் விசாரணை

Update: 2024-07-04 08:47 GMT

தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தில் உள்ள அருந்ததியா் தெருவைச் சோ்ந்த ராஜ் மகன் சுடலைமணி (29). ஆலங்குளத்தில் உள்ள கறிக்கோழிக் கடையில் வேலை செய்துவந்த அவா், தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று பைக் வாங்கினாராம். அவா் கடந்த 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை என்றும், நிதி நிறுவன ஊழியா்கள் வீட்டில் வந்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சுடலைமணியை அவரது தாய் கண்டித்தாராம். இந்நிலையில் சுடலைமணி களைக்கொல்லி மருந்தைக் குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Tags:    

Similar News