டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை கோரி வழக்கு!!
By : King 24x7 Desk
Update: 2025-03-19 15:22 GMT

Chennai Highcourt
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பில் 3 மனுக்கள் தக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அறிக்கையையும் அமலாக்கத்துறை வெளியிட்டது.