தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோரிக்கை வலையுரத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-21 15:40 GMT
ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது ..... பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் முருகதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட, சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News