போலீஸ் ஸ்டேஷனுக்கு மண்டை ஓட்டுடன் வந்த அகோரி

அகோரி

Update: 2024-09-23 02:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் காசி,45; அகோரி. இவர் உலகங்காத்தான் மற்றும் மூரார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் காளி சிலை மற்றும் எலும்புக் கூடுகளை வைத்து வழிபட்டு வருகிறார். மூரார்பாளையம் மணி ஆற்று பாலம் அருகே வழிபாட்டில் இருந்தபோது, அவ்வழியே சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சிலை மற்றும் அங்கு வைத்திருந்த மணியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து புகார் அளிப்பதற்காக காசி, நேற்று காலை மண்டை ஓடு மாலை அணிந்து கொண்டு, தனது பைக்கில் மண்டை ஓடு, அரிவாளுடன் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்தது கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி அவரை அனுப்பி வைத்தனர். மண்டை ஓடு மாலையுடன் அகோரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதை கண்ட பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது.

Similar News