எரிந்த நிலையில் பெண் உடல் கணவரை தேடும் போலீசார்

போலீசார்

Update: 2024-09-23 02:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் கிராமத்தில், வடிவேல் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில், எரிந்த நிலையில் பெண் உடல் மிதப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றில் மிதந்த பெண் உடலை மீட்டு விசாரித்தனர்.அதில், இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மனைவி சுதா, 28, என்பது தெரிய வந்தது. கார்த்திக் லாரி டிரைவர். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிய நிலையில், தம்பதியருக்கு பிரதீஷ், 6, நிகிதா, 4, என்ற குழந்தைகள் உள்ளனர். உடல் கிடந்த கிணற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்த கார்த்திக் வீட்டை போலீசார் சோதனையிட சென்றனர். கதவை திறந்தபோது இரு குழந்தைகளும் துாங்கிக் கொண்டிருந்தனர். வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. மாடியில் சுதாவின் ஆடைகள் எரிந்த நிலையில் கிடந்தன. கார்த்திக் வீட்டில் இல்லை. சுதா உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Similar News