கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் உடல் தீயனைப்பு துறையினரால் சடலமாக மீட்பு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை

கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் உடல் தீயனைப்பு துறையினரால் சடலமாக மீட்பு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை;

Update: 2025-01-28 14:06 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் உடல் தீயனைப்பு துறையினரால் சடலமாக மீட்பு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எம்பி கே புதுப்பட்டி கோதநாச்சியார்புரம் பகுதியில் வசித்து வருபவர் இருளப்பன் மாரியம்மாள் தம்பதியினர் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது பையன் நாகராஜ் வயது 19 என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக வலிப்பு நோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பள்ளி செல்வதை இடைநிறுத்தம் செய்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் அருகே வயல்வெளியில் உள்ள கிணற்றில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதன்படி இன்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டிலிருந்து கிணற்றிற்கு குளிக்கச் சென்ற நாகராஜன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் பல இடங்களில் தேடி உள்ளனர். வயல்வெளியில் விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த விவசாயிகள் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நாகராஜனின் உடைகள் இருப்பதைக் கண்டு நாகராஜனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில்கிணற்று கரைக்கு விரைந்து வந்த உறவினர்கள் கிணற்று கரையில் இருப்பது நாகராஜனின் உடை தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் நாகராஜன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என எண்ணிய உறவினர்கள் இது குறித்து ராஜபாளையம் தீயணைப்பு துறைவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்ட பொழுது 19 வயது வாலிபர் நாகராஜனின் உடல் மீட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய காவலர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில்நாகராஜனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் அவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்த நிலையில் நாகராஜன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 19 வயது வாலிபர் நாகராஜன் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 19 வயது வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டது உறவினர்கள் மத்தியிலும் கிராம மக்கள் மத்தியிலும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News