நெல்லை மாநகர பகுதியில் உள்ள சொக்கட்டான் தோப்பில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவர் மற்றும் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகின்ற மார்ச் 17ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழர் விடுதலை களம் அமைப்பு இன்று அறிவித்துள்ளது.