அமைச்சர் தலைமையில் தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம்
அமைச்சர் தலைமையில் தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம்;

செங்கல்பட்டு மாவட்டநிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புறவாழ்வாதார இயக்கம் சாா்பில் திருப்போரூா் வட்டம், படூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் மாா்ச் 22-இல் (சனிக்கிழமை) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் தனியாா் துறைவேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 20,000 பணிக்காலியிடங்களுக்கு தேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வினை நடத்தி தோ்வு செய்ய உள்ளாா்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.இவ்வேலைவாய்ப்புமுகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்புபி.இ., ஐடிஐ மற்றும்டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வகஉதவியாளா்கள் போன்றகல்வித்தகுதி உடைய வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டுவேலைவாய்ப்பினை பெறலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் 22.03.2025 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 3.00 மணி வரை முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். சில நிறுவனங்கள்வயது வரம்பில் தளா்வு செய்து வேலைவாய்ப்பினை அளிக்கவும் உள்ளன. மேலும் முகாம்தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 94868 70577 /63834 60933 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் .