தேன்கனிக்கோட்டை: குட்டையில் தவறி விழுந்த காட்டு யானை
தேன்கனிக்கோட்டை: குட்டையில் தவறி விழுந்த காட்டு யானை;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன இந்த நிலையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி தவித்தது. தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர். ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர். பின்னர். அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.