திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டு சுத்தமல்லி பாரதி நகர் பகுதி வரை பேருந்து வசதியை நீட்டி தர வேண்டி மனு அளித்தனர். இந்த மனுவின் எதிரொலியாக இன்று பேருந்து வசதி நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் எஸ்டிபிஐ கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
