தோட்டத்தில் முதியவர் உடல் மீட்பு
மதுரை உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் முதியவர் உடல் மீட்கப்பட்டது.;
மதுரை மாவட்டம் பேரையூர் சோழபுரம் சாவடி தெருவில் வசிக்கும் கிருஷ்ணசாமி (65) என்பவர் நேற்று உறவினர் விழாவிற்கு சென்று வீடு திரும்பிய பிறகு மீண்டும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி செல்லத்தாய்க்கு இவருடைய கணவர் செல்லையாபுரம் மேற்கு பூசாரி தோட்டத்தில் இறந்து கிடப்பதாக நேற்று (ஏப்.8) மாலை தகவல் கிடைத்தது. இது குறித்து அவர் டி இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் .போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.