பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க எஸ்டிபிஐ தீர்மானம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் தொகுதி அலுவலகத்தில் வைத்து தொகுதி தலைவர் சலீம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.