மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்.
மதுரை திருமங்கலம் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விமான நிலைய ரோடு ரயில்வே கிராசிங்கில் தினமும் 60 முறைக்கு மேல் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பாலம் அமைக்க கோரிய நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு ரூ. 33 கோடி செலவில் பாலம் அமையவுள்ள நிலையில் ஐம்பது சதவீத பணிகள் முடிந்து ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள இடங்களில் இரும்பு கர்டர்களைக் கொண்டு பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று (ஏப்.23) காலை முதல் மாலை வரை நடந்த பணியில் மூன்று இணைப்புகளாக இணைக்கப்பட்ட 100அடி நீளமுள்ள மூன்று கர்டர்கள் பாலத்தின் மேல் பகுதியில் துாக்கி வைக்கப்பட்டன. பால வேலைகள் வேகமாக நடந்து வரும் நிலையில் தாமதபடுத்தாமல் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.