தனியார் பேருந்து மோதியதில் வாலிபர் பலி

மதுரை அருகே தனியார் பேருந்து மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-04-25 04:39 GMT
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. குடியிருப்பு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தம்பித்துரையின் மகன் மதியழகன் (19) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை-தேனி சாலை யில் நாகமலை புதுக்கோட்டை சந் திப்பில் நேற்று முன்தினம் (ஏப்.23) இரவு சென்று கொண்டிருந்த போது மது ரையிலிருந்து தேனி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மதி யழகனை அந்தப் பகுதி பொதுமக் கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநரான பேரையூரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News