கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு

மதுரை வாடிப்பட்டி அருகே கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-04-25 04:42 GMT
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகர் விஜயன் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (28)இவரது மனைவி சங்கீதா (26) இந்த தம்பதியருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, இருவரின் குடும்பத்தினரும் தலை யிட்டு, இவர்களை அவ்வப்போது சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப்.23) இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது . இதில் ஆத்திரமடைந்த சங்கீதா வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ரஞ்சித்குமாரை சரமாரியா கக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக நேற்று (ஏப்.24)ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில், சங்கீதா மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து வசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News