கம்பம் அருகே க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (28). இவர் நேற்று முன்தினம் இரவு அவரது இருசக்கர வாகனத்தில் சின்னமனூர் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தினேஷ்பாபு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் நேற்று (ஏப்.24) வழக்கு பதிவு.