விபூதியால் ஆதி சிவனுக்கு சிறப்பு அலங்காரம்
மதுரையில் ஆதி சிவனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.;
மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் இன்று (ஏப். 25) மாலை பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விபூதி கொண்டு ஆதி சிவன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டனர். வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.