ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!;

Update: 2025-06-23 04:05 GMT
ராணிப்பேட்டை அருகே நெல்லிக்குப்பம் கிராமம் ஈசங்க்காட்டம்மன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் வெல்டிங் வேலை செய்து கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News