கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி திட்டம் மற்றும் வரவேற்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். துறை தலைவர்கள் உமா, பிரேமா, நுாலகர் அசோக்குமார், வீரலட்சுமி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். விழாவில் டி.எஸ்.பி., தங்கவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.