திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. நடராஜருக்கு ஆண்டிற்கு 6 தினங்கள் மட்டுமே மகா அபிஷேகம் நடக்கும். அதில் ஒன்று ஆனி திருமஞ்சனம். நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க நடராஜர் சபையில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.