பிரியாணி கடை திறப்பதற்கு உரிமம் வழங்குவதாக கூறி தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 239 நபர்களிடம் ரூ. 25 கோடி வரை மோசடி...*

பிரியாணி கடை திறப்பதற்கு உரிமம் வழங்குவதாக கூறி தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 239 நபர்களிடம் ரூ. 25 கோடி வரை மோசடி...*;

Update: 2025-01-31 12:35 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை திறப்பதற்கு உரிமம் வழங்குவதாக கூறி தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 239 நபர்களிடம் ரூ. 25 கோடி வரை மோசடி... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி 4 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேர்களிடம் ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன். இவர் 2 வருடங்களுக்கு முன் பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு தமிழகம் முழுவதும் கிளை திறக்க உள்ளதாகவும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 239 பேர் தங்கள் பகுதியில் பிரியாணி கடை திறப்பதற்காக தொடர்பு கொண்டுள்ளனர். உரிமத்திற்கு ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 1.28 லட்சம் மற்றும் பொருட்கள், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக ரூபாய் 5 முதல் 10 லட்சம் வரை என தன்னை தொடர்பு கொண்டவர்களிடம் ரூபாய் 25 கோடி வரை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு உடந்தையாக ப்ரவீன், ராம்குமார், தேவதாஸ், மரியநாயகம், சதீஷ்குமார் ஆகிய 5 பேர் இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதற்காக 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளார். தொடக்கத்தில் 21 கடைகள் மட்டும் திறந்து சிறிது காலத்தில் மூடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது வரை கடை திறக்கப் படவில்லை. பணமும் திருப்பி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதனால் விசாரணை வளைத்திற்குள் கொண்டு வரப்பட்ட கங்காதரன், தன்னை நீதிமன்ற வழக்கு மூலம் மட்டுமே விசாரணை செய்யப் பட வேண்டும் என ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விபரம் குறித்து அறிவிக்க பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 249 பேர்களுக்கும் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று 4 மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். ஆனால் வழக்கு தொடர்ந்த கங்காதரன் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உள் வாயில் அருகே திரண்டு, கங்காதரனை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய டிஎஸ்பி உள்ளிட்ட காவல் துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை தொடர்ந்து கலைந்து சென்ற அவர்கள், கங்காதரன் உள்ளிட்ட 6 பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பேட்டி: ராமசாமி - வழக்கறிஞர்

Similar News