பேருந்து டயர் வெடித்து தடுப்பில் மோதி 8 பேர் காயம்
காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து டயர் வெடித்து நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விபத்து;
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து, நேற்று, மதியம் 1:00 மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தினை ஓட்டுநர் கார்த்திகேயன், 57, ஓட்டிச் சென்றார். பொன்னேரிக்கரை மேம்பாலத்தில் இறங்கும் போது, முன்புற டயர் வெடித்ததில், நிலை தடுமாறியதில் மேம்பால வலதுபுற தடுப்பு மீது மோதி நின்றது. இதில், அரசு பேருந்தில் பயணம் செய்தவர்களில், ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என, 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த பேருந்து விபத்தின் போது, ஓட்டுநர் மொபைல் போன் பேசியதாக பயணியர் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.