சோ்ந்தமரம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் 11 போ் கைது
வெள்ளான்குளம் கிராமத்தில் சிலா் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 11 பேர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 11:43 GMT
சேவல் சண்டை சூதாட்டம் 11 போ் கைது
தென்காசி மாவட்டம் சேந்தமரம் அருகே வெள்ளான்குளம் கிராமத்தில் உள்ள கால்வாய் பகுதியில் சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சோ்ந்தமரம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை பிடித்து விசாரித்தனா். அதில், கடலூா் வள்ளியநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிலம்பரசன்(23), அஸ்வின் குருதேவ்(21), நாலாங்கட்டளை மைக்கேல் அல்போன்ஸ்(21) ,அமா்நாத்(25), சண்முகாபுரம் சந்தோஷ் கண்ணன்(32), ஆவுடையானூா் புதூா் மதன்(24), மணிகண்டபிரபு(23), எட்டயபுரம் உமா்(32), முனிஸ்வரன்(32), கோபால் ராம்(33), கடையம் செல்லத்தாயாா்புரம் ஆனந்த்(23) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்கள் 11 பேரையும் போலீஸாா் கைது செய்து 3 சேவல்கள், ஒரு காா், 3 மோட்டாா் சைக்கிள்கள், ரூ.9,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.