காரிமங்கலத்தில் 20 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்ற தேங்காய் வாரச் சந்தையில் தேங்காய் வரத்து அதிகரித்ததால் 20 லட்சத்திற்கு விற்பனையானது.

Update: 2024-06-04 02:09 GMT

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று கூடிய சந்தைக்கு காரிமங்கலம், காவேரிப் பட்டணம், பாரூர், அரசம்பட்டி, தட்றஅள்ளி, குடிமேன அள்ளி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் என, சுமார் 2 லட்சம் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதனை கொள்முதல் செய்த தமிழ கம் மட்டுமின்றி வெளிமாநில வியா பாரிகளும் சந்தையில் குவிந்தனர். தேங்காய் அளவை பொறுத்து 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையானது. மற்றும் நேற்று ஒரே நாளில் 20 லட்சத்துக்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. முகூர்த்த நாட்கள், கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதாலும், தேங்காய் தேவை அதிகரித்து, விற்பனையும் அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News