ஆம்பூர் அருகே தேங்காய் மண்டியில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தேங்காய் மண்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-03-11 09:52 GMT

தீயை அணைக்கும் வீரர்கள்

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தேங்காய் மண்டி உள்ளது. இந்த மண்டியில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென தேங்காய் மண்டியில் தேங்காய் உரிக்கப்பட்ட மட்டைகள் ஒருபுறம் மலை போல் குவிக்கப்பட்டு வைத்திருந்த நிலையில் திடீரென தேங்காய் மட்டைகளில் தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் சிலர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறலுக்குள்ளாகி மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த உமராபாத் காவல் துறையினர் தேங்காய் மண்டி உரிமையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்கனவே அப்பகுதியில் சிலருடன் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துவிட்டு சென்றனரா? அல்லது அருகாமையில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News